5ஜி சேவைக்காக பிஎஸ்என்எல் ஆயத்தம்.! சேவை எப்போது தெரியுமா?
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 5ஜியை சேவையை துவங்க ஆயத்தமாகி வருகின்றது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களும் எப்போது சேவை துவங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றன.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 2 ஜி ,3 ஜி, 4ஜி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றது.
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இதன் மூலம் செல்போன் சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் தனித்துவமாக இருக்கின்றனர். ஜியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடும் வகையில், அறிவிப்புகளையும் அவ்வபோது அறிவித்து மற்ற நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 5ஜியை சேவையை துவங்க ஆயத்தமாகி வருகின்றது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களும் எப்போது சேவை துவங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றன.

இசெட்டிஇ நிறுவனம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் இசெட்இ நிறுவனத்துடன் இணைந்து 5 ஜி சேவைக்காக நெட்வொர்க் அமைக்கும் பணிக்காக ஆயத்தமாகி வருகின்றது.
தனியார் துறை நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில், அரசு நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுகின்றது. இதற்காக சீனாவை சேர்ந்த இசெட்டிஇ என்ற தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

பாதுகாப்பு சிக்கல்கள்:
5 ஜி சேவையை நாடு முழுவதும் அமல்படுத்துவத்தில் பாதுகாப்பு சிக்கள் இருப்பதாக தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவன தலைவர் அனுபவம் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.

முற்றுப்புள்ளி வைக்கும் நிலை:
5 ஜி சேவையை கொண்டு வருவதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகின்றது. ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், கண்டிப்பாக இந்த முயற்சியைத் தொடரமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

செயல்படுத்தும் முறை:
ஆபத்து இல்லாத போது இந்த புதிய தொழில் நுட்பத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் கண்டிப்பாக கொண்டு செயல்படுத்தும். இதுகுறித்து இசெட்இ நிறுவனம் இதுகுறித்து எந்த தகவலையும் கூறவில்லை.

5 ஜி சேவையளிக்கும் பிஎஸ்என் நிறுவனம்:
கடந்த 2012ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 2 ஜி நெட்வொர்க் அமைக்க இசெட்டிஇ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிட தக்கது. இதனால் இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை பொது மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications