வெறும் ரூ.999/-க்கு பாரத் 2 அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்; ஜியோபோனிற்கு குட்பை.!
இக்கருவி க்வாட் கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் செயலி மூலம் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து, பாரத் 2 அல்ட்ரா என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.999/-க்கு அறிமுகமாகியுள்ள இக்கருவி, இந்தியாவின் மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.
கடந்த வாரம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் உடன்இணைந்து அதன் 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாரத் 2 அல்ட்ரா என்ற ஸ்மார்ட்போனை வோடபோன் உடன் இணைந்து ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
வெளியான பாரத் 2 அல்ட்ராவின் பிரதான அம்சங்களை பற்றி பேசுகையில், இக்கருவி க்வாட் கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் செயலி மூலம் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது.

4ஜிபி உள்ளடக்க சேமிப்பு
சேமிப்பை பொறுத்தமட்டில், 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், 2எம்பி பின்புற கேமரா மற்றும் 0.3எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

1300எம்ஏஎச் பேட்டரி
ஒரு 1300எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி கொண்டுள்ள அதே அம்சங்களை தான் கடந்த ஆண்டு வெளியான பாரத் 2 சாதனம் கொண்டிருந்தது ஆனால் அதன் விலை நிர்ணயம் ரூ.3499/- ஆக இருந்தது.

வெறும் ரூ.999/-க்கு
ஆக மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் திறம்பட்ட விலை ரூ.2,899/- என்பதையும் ஆனால், வெறும் ரூ.999/- அறிமுகமாகியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. வோடபோன் வழங்கும் சிறப்பு திட்டங்களையும் இக்கருவி கொண்டு அணுக முடியும்.

ரூ.1900/- என்ற ரீபண்ட்
36 மாதங்களுகளுக்கான ரூ.150 பேக் ரீசார்ஜ்செய்ய வோடாபோன் நிறுவனத்திடமிருந்து ரூ.1900/- என்ற ரீபண்ட் பெறலாம், அதாவது பணத்தை திரும்ப பெறலாம். இரண்டு தவணைகளில் கிடைக்கும் இந்த ரீபண்ட்டை, முதல் 18 மாதங்கள் கழித்து 900 ரூபாயும் மற்றும் 36 மாத இறுதிக்குள் 1000 ரூபாயும் என முழு தொகையையும் பெற முடியும்.

எம்-பைசா கணக்கு வழியாக
எனினும், ரீபண்ட் தொகையை பெறும் வோடபோன் வாடிக்கையாளரின் வோடபோன் எம்-பைசா கணக்கு வழியாகத்தான் இந்த தொகை பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பானதொரு அறிமுகம்
ஜியோபின் அறிமுகத்தை தொடர்ந்து, ஏர்டெல் (கார்போன் ஏ40 இந்தியா என்ற ஸ்மார்ட்போனை ரூ.1399/-க்கு அறிமுகம் செய்தது) மற்றும் ஐடியா போன்ற தற்போதைய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சொந்தமான மற்றும்மலிவான 4ஜி திறன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன. அதில் சிறப்பானதொரு அறிமுகமான இக்கருவி வெளிப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications