ஆப்பிள் 5சி விற்பனை நிறுத்தம், அப்படியா அப்போ 6சி வரப்போகுதா?
வண்னமயமான ஆப்பிள் கருவிக்கு 2015 ஆம் ஆண்டு மூடு விழாவாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் 5சி பல வண்னங்களில் அனைவரையும் கவரும் விதத்தில் வடசிவமைக்கப்பட்டிருந்தது. இளைஞர்களிடம் ஆப்பிள் 5சி பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்த வவேகமாகவும், மிகச்சிறந்த டிஸ்ப்ளே, கேமரா அம்சங்கள் மற்றும் 4ஜி/எல்டிஈ என அனைத்து அம்சங்களும் சிறப்பாக கொண்டு டச் ஐடி கைரேகை ஸ்கேனர் என இதன் அம்சங்களின் பட்டியல் நீண்டாலும் ஆப்பிள் பே அம்சம் மறைந்திருந்தது.

2015 ஏப்ரல் முதல் ஆப்பிள் 5சி கிடைக்காது என்றாலும் ஆப்பிளின் அடுத்த வரவு நிச்சயம் 6சியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications