ரூ.7,200 கோடி கொடுத்து எரிக்ஸன் நிறுவனத்தை வாங்குகிறது சோனி

By Super
|
ரூ.7,200 கோடி கொடுத்து எரிக்ஸன் நிறுவனத்தை வாங்குகிறது சோனி
ரூ.7,200 கோடி மதிப்பில் மொபைல் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எரிக்ஸன் நிறுவனத்தை சோனி நிறுவனம் வாங்குகிறது.

கடந்த 2001ம் ஆண்டு முதல் சோனி நிறுவனமும், எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து மொபைல்போன்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில், மொபைல்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சோனி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, மொபைல்போன் தயாரிப்பில் உலக அளவில் முதல் 10 இடத்தில் இருக்கும் எரிக்ஸன் நிறுவனத்தை ரூ.7,200 கோடி மதிப்பில் சோனி விரைவில் கையகப்படுத்துகிறது. எரிக்ஸன் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் சோனி நிறுவனமே வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

எனவே, மொபைல் விற்பனையை பன்மடங்கு அதிகரிக்கும் பொருட்டு சோனி நிறுவனம் மொபைல்களை தானே வெளியிடுவதாக உள்ளது.

இதன் மூலம் டெலிவிஷன், கேமரா, மொபைல் போன் போன்ற அனைத்து சாதனங்களின் விற்பனையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியும் என்று சோனி நிறுவனம் கருதுகிறது.

இதனால் இதுவரை கொடுத்த படைப்புகளையும்விட மிகவும் உயர்ந்தரக தொழில் நுட்பங்களை சோனி நிறுவனம் வழங்கும் என்று எதிர் பாக்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X