ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியில் கூல்...கூல்... ஸ்மார்ட்போன்!

By Super
|
ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியில் கூல்...கூல்... ஸ்மார்ட்போன்!

மனதை உருக வைக்கும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது ஷார்ப். பேன்டான்-5 என்ற இந்த புதிய ஸ்மார்ட்போனை ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உருவாக்கி உள்ளது ஷார்ப் நிறுவனம்.

இதன் திரையும் தெளிவான தகவல்களை 3.7 இஞ்ச் திரையின் மூலம் வழங்கும். 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 8 புதிய கலர்கள்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூல்...கூல்... செய்தி தான்.

இதன் அத்தனை 8 நிறங்களும் கண்களை எளிதாக கவர்ந்துவிடும். மனதை கவரும் வண்ணங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 2 கேமராக்களை கொண்டது.

4 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த பேன்டான்-5 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். கேமரா, திரை, இயங்குதளம் என்று எல்லா வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த ஷார்ப் பேன்டான்-5 ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் அங்கு சிறந்த வரவேற்பினை பெற்றால், இந்தியாவிலும் அறிமுகமாகலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X