"இப்போதைக்கு நாங்க தான்டா கெத்து" என்று அமைதியாக விவரிக்கும் விதமாக சாம்சங் நிறுவனம் புதிய கருவி ஒன்றை வெளியிட்டுள்ளது..! "அடேங்கப்பா.. அதுக்குள்ள புதிய போன் வெளியிட்டுட்டாங்களா..?"னு கேள்வி கேக்குறவங்க, கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்து அப்படி என்ன போனை தான் வெளியிட்டிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
சாம்சங்
சாம்சங் நிறுவனம் ஏ சீரிஸ் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாடல்
அதன் படி புதிய கருவி சாம்சங் கேலக்ஸி ஏ8 என்றும் அதன் விலை ரூ.32,500க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டை
தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ8 பெற்றிருக்கின்றது.
ஸ்கிரீன்
புதிய கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.
பிராசஸர்
64-பிட் சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டு இந்த கருவி பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரேம்
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த கருவியில் மெமரியை கூடுதலாக நீட்டிக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கைரேகை ஸ்கேனர்
கேலக்ஸி ஏ8 கருவியில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ8 கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான செல்பீ எடுக்க ஏதுவாக இருக்கும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இயங்குதளம்
சாம்சங் டச்விஸ் யூஸர் இன்டர்பேஸ் கொண்ட ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது கேலக்ஸி ஏ8.
கனெக்டிவிட்டி
3ஜி, 4ஜி, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3050 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.