கேலக்ஸி பீம் புரொஜெக்டருடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!
பல தொழில் நுட்ப சாகசங்களை செய்து வரும் சாம்சங், கேலக்ஸி பீம் தொழில் நுட்பத்தினை உருவாக்கி உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி பீம் லுமென்ஸ் புரொஜக்டர் தொழில் நுட்ப வசதியினை, ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் உருவாக்கி உள்ளது.
இந்த கேலக்ஸி பீம் 15 லுமென்ஸ் புரொஜெக்டர் வசதியினை சுவர் போன்றவற்றில் பயன்படுத்தி மல்டிமீடியா கன்டன்டு வசதியினை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்களத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த அகன்ற திரையின் மூலம் 480 X 800 திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும்.
8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். சிறந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்வதற்காகவே இதில் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் வசதியையும் வழங்கும். இந்த புதிய சாம்சங் ஸ்மார்டபோன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
