2 புதிய சாம்சங் மொபைல்போன்கள் அறிமுகம்!

இன்று சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் அட்வான்ஸ் (ஜிடி-19070) மற்றும் கேலக்ஸி பாக்கட் (ஜிடி-எஸ்5300) ஆகிய இரண்டு மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இரண்டு மொபைல்களும் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.
குறிப்பாக கேலக்ஸி எஸ் அட்வான்ஸ் மொபைல் 4 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் 1ஜி ஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டு வருகிறது. இதன் 5 எம்பி கேமரா மிக அசத்தலாக இருக்கும். குறிப்பாக இதில் பைன் மை மொபைல் வசதி உள்ளதால் ஒரு வேளை இந்த மொபைல் தொலைந்தாலும் இதை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
மேலும் இந்த மொபைல் வைபை வசதி கொண்டிருப்பதால் ப்ரவுசிங் செய்வதும் எளிதாக இருக்கும். இந்த மொபைலின் விலை ரூ.26900 ஆகும்.
அடுத்ததாக சாம்சங் கேலக்ஸி பாக்கெட் மொபைல் மிகவும் மெல்லியதாகும். இந்த மொபைல் 832 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் நவீன வைபை இணைப்பு கொண்டு வருகிறது. இதுவும் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கம் மொபைலாகும்.
இதன் 3ஜிபி மெமரியை 32ஜிபி வைர வரிவு செய்ய முடியும். இந்த மொபைல் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் வருவதால் இந்திய இளைஞர்களைக் கவரும் என்று நம்பலாம். இதன் விலை ரூ.8150 ஆகும்.


Click it and Unblock the Notifications