கேலக்ஸி எஸ்7, எஸ்7 எட்ஜ் : இந்தியாவில் மார்ச் வெளியீடு..!
உலகெங்கும் அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஒரு வழியாக அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கருவிகள் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. தற்சமயம் உலகின் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் கருவிகளில் ஒன்றாக சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் இருக்கின்றது.

விலை
தற்சமயம் வரை விலை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் அந்நிறுவனம் புதிய கருவிகளை மார்ச் மாத மத்தியில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விற்பனை
விற்பனையை பொருத்த வரை இந்திய சந்தை பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

கருவிகள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் இறக்குமதியானது 2014 ஆம் ஆண்டில் 1.30 மில்லியன் கருவியில் இருந்து 1.43 பில்லியனாக 2015 ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கின்றது.

அதிகம்
உலகில் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா இருக்கின்றது. கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் வர்த்தகம் 28.8% வளர்ச்சியடைந்திருக்கின்றது.

சாம்சங்
இந்தியா மற்றும் உலக சந்தையை பொருத்த வரை சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது. உலக சந்தையில் 21.4% மற்றும் இந்தியாவில் 26.8% பங்குகளை சாம்சங் நிறுவனம் கொண்டிருக்கின்றது.

கேமரா
கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவிகளில் சாம்சங் நிறுவனம் உலகின் முதல் டூயல் பிக்ஸல் கேமராக்களை அறிமுகம் செய்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

அம்சம்
5.1 இன்ச் கேலக்ஸி எஸ்7 மற்றும் 5.5 இன்ச் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகள் 3டி கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கின்றது.

மெமரி
ஹைப்ரிட் சிம் டிரே வழங்கப்பட்டுள்ளதால் 200 ஜிபி திறன் கொண்ட மைக்ரோ எஸ்டி கார்டு வரை பொருத்த முடியும்.

மேலும் படிக்க :
ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!
லீஈகோ லீ 1எஸ் : விலை, டிசைன், எடை, சிக்னல் செயல்திறன், பேட்டரி ஒப்பீடு..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications