200எம்பி மெயின் கேமரா: சூப்பரான ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்கும் Samsung.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன.

கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமராவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

200எம்பி மெயின் கேமரா
அதாவது Exynos சிப்செட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கேமரா சென்சார்களை உருவாக்கும் Samsung நிறுவனத்தின் செமிகண்டக்டர் பிரிவு சமீபத்தில் 200MP ISOCELL HP3 சென்சார் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த 200எம்பி கேமராவை தான் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போனில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குவாட் கேமரா அமைப்பு
குறிப்பாக இந்த கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவாட் கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பெரிய டிஸ்பிளே
மேலும் 91mobiles தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எக்ஸிநோஸ் 2100 சிப்செட் வசதியை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்என்று கூறப்படுகிறது.

சூப்பரான பேட்டரி
அதேபோல் 12ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் சாம்சங் நிறுவனத்திற்கு முன்பே 200எம்பி கேமராவுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோ எக்ஸ்30 ப்ரோ
அதாவது மோட்டோ எக்ஸ்30 ப்ரோ (Moto X30 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோஸ்மார்ட்போன் 200எம்பி கேமராவுடன் இந்த மாதம் இறுதியில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட்
இந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ போனின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் 200எம்பி 1/1.22-inch கேமரா தான். குறிப்பாக இதன் உதவியுடன் அனைத்து இடங்களிலும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேகேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். இந்த ஸ்னாப்டிரான் சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோ எக்ஸ்30 ப்ரோ டிஸ்பிளே
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ மாடல் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ்30 ப்ரோ பேட்டரி
மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதற்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னமும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் VS மோட்டோ
முதல் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போனை முதலில் மோட்டோ நிறுவனம் தான் அறிமுகம் செய்யும் என ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதற்குமுன்பு கூட சாம்சங் நிறுவனம் 200எம்பி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








