கேலக்ஸி நோட் 8 : ஸ்னாப்டிராகன் 836 கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்.!
"நோட்" தொடரின் கீழ் சாம்சங் வெளியோடும் அதன் முதன்மை தொலைபேசியை ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் முதலில் இக்கருவியை 836 செயலியை எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 8, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று வதந்திகள் வெளியாகியுள்ளது. மறுபக்கம் இக்கருவிதான் ஸ்னாப்டிராகன் 836 செயலி கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என பிளேபுல்ட்ராய்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

வெளியான அறிக்கையின் படி, முக்கிய பிராண்ட்கள் அவைகளின் தலைமை ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டின்டின் மூன்றாம் காலாண்டில், முக்கியமாக ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் மூலம் இயக்கப்படும் கருவிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. ஆக "நோட்" தொடரின் கீழ் சாம்சங் வெளியோடும் அதன் முதன்மை தொலைபேசியை ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் முதலில் இக்கருவியை 836 செயலியை எதிர்பார்க்கலாம். அடுத்தபடியாக எல்ஜி வி30 மற்றும் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய கருவிகள் அக்டோபரில் வெளியாகும் அவ் அவைகளிலும் இவ்வகை சிப்செட் இடம்பெறவுள்ளது.
க்வால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி ஆனது ஸ்னாப்டிராகன் 835 செயலிக்கு அடுத்ததாக வெளியாகும் சிப்செட் ஆகும். இது சாம்சங் நிறுவனத்தின் தலைமை தொலைபேசியான கேலக்ஸி எஸ்8 / எஸ்8 + கருவிகளில் அறிமுகமானது. பிளேபுல்ட்ராய்டு அறிக்கை மூலம் அடுத்த க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டில் ஒரு 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி இடம்பெறும் மற்றும் அது ஜிபியூ 740மெகாஹெர்ட்ஸ் கொண்டு வேலை செய்யும் என்றும் அறிக்கை கூறுகிறது.

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 836 செயலிகளில் இயங்கும் கைபேசிகள் அமெரிக்க சந்தையில் மட்டுமே கிடைக்கும், அதே நேரத்தில் சாம்சங் எக்ஸ்நோஸ் (Exnos) 8895 இயங்கும் கேலக்ஸி குறிப்பு 8 இதர சந்தைகளில் வெளியாகலாம். ஆக மொத்தம் சாம்சங் கேலக்ஸி எஸ்8 + ஸ்மார்ட்போனை விட "பெரிய மற்றும் சிறந்த" கேலக்ஸி நோட் வெளியீடு இந்த ஆண்டு உறுதி செய்யப்படுகிறது.
முன்பு வெளியான ஒரு தகவளில் வரவிருக்கும் சாம்சங் கேலக்சி நோட் 8 சாதனத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை இழக்க நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. மிகவும் அதிகப்படியான கசிவுகளில் சிக்கி வரும் கேலக்ஸி நோட் 8 சாதனத்தின் அந்த சமீபத்திய கசிவு கருவியின் திரையில் கைரேகை ரீடர் கொண்டிருக்காது என்று அறிவித்துள்ளது.

"கேலக்ஸி குறிப்பு 8-ல் ஒரு காட்சி-ஒருங்கிணைந்த கைரேகை சென்சார் ஒன்றை நிறுவ முயன்றோம், ஆனால் இந்த மூலோபாய தொலைபேசியின் பாதுகாப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப வரம்புகளால் அது நிறுவப்படவில்லை" என்று சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ சாதனங்களில் இடம்பெற்ற அதே தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கும் சாம்சங் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும். ஆனால் அது நடக்காது. திரையில் கைரேகை ரீடர் அம்சம் கொண்டு வரவிருக்கும் கேலக்ஸி நோட் 8 இருக்க முடியாது என்று அறிக்கை விளக்கமளித்துள்ளது.


Click it and Unblock the Notifications