Home
Mobile

இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.!

சாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான
வடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனின் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேலக்ஸி எஸ்10 சீரிஸில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப்

சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப்

மேலும் சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப் செயலியை பலர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வசதிகளுடன் இந்த செயலி அப்டேட் ஆகியுள்ளது.

அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட்

அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட்

இந்த செயலியை அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட் அப்ளை செய்வது, லோன் பெறுவது ஆகியவை பைசாபஜார் மூலம் எளிமையாகிறது. சாம்சங் செயலி மூலம் பைசாபஜார் இணையதளத்தில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் லோன் மற்றும் கிரெடிட் கார்ட் வழங்குவதற்கான அப்ரூவல் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.

பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.

ஏற்கனவே சாம்சங் செயலி ஒருசில அப்டேட்டுக்களை செய்து பொருளாதார பரிமாற்றத்திற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேலும் பயனர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அப்டேட்டுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் காரணமாக ஆன்லைன் பயனாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி மேலும் சில பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.

பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா

பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா

இதுகுறித்து பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் உடனடியாக கிரெடிட் கார்டுகளையும் பெர்சனல் லோன்களையும் பெற்று கொள்ளலாம். எங்களுடைய இந்த சேவைகள் அதிவிரைவாகவும், எளிமையாகவும் இருக்கும்.

பொதுமக்களின் பொருளாதார தேவை

பொதுமக்களின் பொருளாதார தேவை

இதேபோல் மேலும் சில வசதிகளை பின்னாளில் அறிமுகம் செய்யவே சாம்சங் நிறுவனத்தின் செயலியுடன் தங்கள் நிறுவனம் இணைந்து பொதுமக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்

டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் பேமெண்ட்

இதே போல் சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவின் சீனியர் இயக்குனர் சஞ்சய் ரஜ்டான் அவர்கள் கூறியபோது, 'இந்த புதிய முயற்சியால் அதிவேகமான பொருளாதார சேவை பயனாளிகளுக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் எளிய முறையில் டிஜிட்டல் பேமெண்ட் என்ற வசதியை பயனர்கள் அனைவரும் எந்த இடத்தில் இருந்தாலும் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


இந்த வசதியை பெற நீங்கள் வாங்கும் அல்லது ஏற்கனவே வாங்கியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் முதலில் சாம்சங் பே செயலியைஇன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தும் முன்னர் உங்களுடைய கண்பார்வை அல்லது பிங்கர் பிரிண்ட்டைபதிவு செய்ய வேண்டும். அதனையடுத்து பாதுகாப்பு பின் நம்பரையும் நீங்கள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய கிரெடிட் கார்டை இந்த செயலியுடன் இணைத்து கொள்ளலாம். இந்த கிரெட்டிட் கார்டு வெரிஃபை செய்யப்பட்டவுடன் உங்களுடைய அனைத்து தேவைகளையும் இதன்மூலம் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 surfaces on Geekbench: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X