கடும்விமர்சனம் சாம்சங் கேலக்ஸி போல்டபுள் போன் நிறுத்தி வைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்து இருக்கின்றது. இந்நிலையில் முதல் முறையாக வெளியிடும் மடிக்க கூடிய ஸ்மார்ட்ப
சாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இந்தியாவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்து இருக்கின்றது. இந்நிலையில் முதல் முறையாக வெளியிடும் மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் உடைத்து விடுவதால் அதை வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம்:
சம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவில் இளைஞர்கள் மத்தியிலும், பல்வேறு மாடல் போன்களையும் சாம்சங் நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ப சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில், தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் மடிக்க கூடிய ( போல்டபுள்) வகையில் அறிமுகம் செய்தது.

பிளவு படுகின்றது:
சாம்சங் கேலக்ஸி போல்டபுள் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் உடைத்து விடுவதாக ( பிளவுபடுதல்) குற்றச்சாட்டு எழுந்தது.

கடும் விமர்சனம்:
சாம்சங் கேலக்ஸி போல்டபுள் ஸ்மார்ட்போன்கள் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து சம்சங் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போன்கள் திரை பிளவுபடுவது குறித்தும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

நிறுத்தி வைப்பு:
இது குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதால், உடனடியாக சாம்சங் நிறுவனம் வர்த்த ரீதியாக வெளியீட்டை தற்காலிமாக ஒத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரலில் அறிமுக திட்டம்:
1980 டாலர்கள் விலையை கொண்ட இந்த கைப்பேசி வரும் ஏப்ரல் 26ம் தேதி அமெரிக்காவிலும், மே3ம் தேதி பிரிட்டனிலும் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications