ஜனவரி 5 : புதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ8(2018).!
கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
வரும் ஜனவரி 5-ம் தேதி கேலக்ஸி ஏ8(2018) ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவருகிறது சாம்சங் நிறுவனம், மேலும் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ8(2018) டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் தண்னீர் மற்றும் தூசி புகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ8(2018) ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1080ஒ2220) பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
கேலக்ஸி ஏ8 (2018) தொடர் தான் சாம்சங் கியர் விஆர் ஹெட்செட் ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் ஏ தொடர் கருவிகளாகும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் .


Click it and Unblock the Notifications