ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய 4 ஜி மொபைல்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது

அதன் அடிப்படையில் நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டின் ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தேடி செல்கிறனர்.
இருப்பினும், ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் அப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இன்னும் மவுசு குறையவில்லை.
ஏனென்றால் எபிக் 4ஜி ஸ்மார்ட் மொபைலில் ஜின்ஜர்பிரீட் ஓஎஸ் தொழில் நுட்பத்தைப் பெற சாம்சங் நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது.
ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்ட எபிக் 4ஜி மொபைல், இந்த வாரம் அமெரிக்காவில் வெளியாகும்.
ஹம்மிங்பேர்டு அப்ளிக்கேஷன் கொண்ட இந்த மொபைலில் 1ஜிஎச்இசட் பிராசஸர் இந்த மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும்.
இது 4.0 சூப்பர் அமோல்டு தொழில் நுட்ப திரை கொண்ட ஸ்லைடர் மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுதெல்லாம் புகைப்படங்களை கேமராவின் மூலம் எடுப்பதை விட, அதிகமாக மொபைலில் உள்ள கேமராவின் மூலமாகத் தான் எடுக்கின்றனர்.
அதனால் இந்த மொபைலில் சிறந்த ஆற்றல் வாய்ந்த 5.0 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
எபிக் 4ஜி மொபைலில் 1ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை மெமரி கார்டு ஸ்லாட் மூலம் 32ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
இதில் லித்தியம் அயான் 1,500 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 6 மணி நேரம் டாக் டைம் மற்றம் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் பெற முடியும்.
இந்த மொபைல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வசதி கொண்ட ஏ2டிபி புளூடூத் மூலம் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடியும்.
அதோடு இந்த மொபைலில் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருந்து, லேட்டஸ்டு ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
எபிக் 4ஜி மொபைலின் விலை ஒவ்வொரு ஸ்டோர்களுக்கும் வித்தியாசப்படும்.
நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications