ரூ.2,000 விலையில் புதிய சாம்சங் மொபைல்!

By Super
|

ரூ.2,000 விலையில் புதிய சாம்சங் மொபைல்!
அதிக விலையில் உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுப்பதில் கவனம் செலுத்தி வரும் சாம்சங் நிறுவனம், இ-1230 என்ற பெயரில் புதிய என்ட்ரி லெவல் மொபைலை வெளியிட்டிருக்கிறது.

இந்த புதிய மொபைல் வெறும் 73 கிராம் எடை கொண்டது. இதனால் கையில் வைத்திருப்பதற்கு எந்த விதமான சிரமும் இருக்காது, எளிதாக கையாளலாம். இந்த இ-1230 மொபைல் ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்டு செயல்படுகிறது. இதன் கீப்பேடுகள் மிக மிருதுவாக இருக்கும்.

இதில் உள்ள திரை வசதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அந்த செய்தியும் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தை தான் கொடுக்கும். ஆம்! இதில் 1.8 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளதால், 128 X 160 திரை துல்லியத்தில் எதையும் தெளிவாகவும் காட்டுகிறது. இதன் டிஎப்டி தொழில் நுட்பம் 56,000 கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது.

இந்த மொபைல் ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 800 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. அதனால் 8 மணி நேரம் 40 நிமிடங்கள் டாக் டைம் வசதியினை கொடுக்கும். பாடல்களையும் கேட்டு மகிழ எப்எம் ரேடியோவும் உள்ளது.

இந்த புதிய சாம்சங் இ-1230 மொபைல் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த புதிய மொபைல் ரூ.2,000 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X