நவீன முறைகளை கொடுக்கும் புதிய சாம்சங் மொபைல்!

நவீன தொழில் நுட்பங்களை கொடுத்த சாம்சங் நிறைய டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களயும் இந்த சாம்சங் நிறுவனம் கொடுக்கிறது என்பது வாடிக்கயாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.
டியூவல் சிம் பட்டியலில் புதிய சாம்சங் சி-3312 டியோஸ் என்ற மொபைலும் சேர உள்ளது. டியூவல் சிம் தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த மொபைல் டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதிக்கும், 256கே கலர்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. 2.8 இஞ்ச் திரையினை வழங்கும் இந்த மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
வாங்கும் மொபைலில் சிறந்த கேமரா வசதி இருக்க வேண்டும் என்பது அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்புவது தான். இந்த சி-3312 டியோஸ் மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே 3.5 ஆடியோ ஜேக் வசதியை வழங்கும் இந்த புதிய மொபைல், புளூடூத் 2.0 மூலம் சிறப்பான முறையில் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கம்ப்யூட்டரில் இருந்து தவல்களை எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ள உதவும் யூஎஸ்பி வசதியையும் இந்த புதிய சாம்சங் மொபைல் வழங்கும்.
பொழுது போக்கு அம்சமாக எப்எம் ரேடியோ வசதியை சி-3312 டியோஸ் மொபைலில் கேட்டு மகிழலாம். மொபைல் கொடுக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை சாம்சங் நிறுவனம் நவீன தொழில் நுட்ப முறைகளை கொடுத்து வருகிறது. இந்த சாம்சங் சி-3312 மொபைலிலும் அந்த தொழில் நுட்ப திறனை நிச்சயம் எதிர் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications