ஜியோ போன் : விரைவில் தொடங்குகிறது முன்பதிவு.!
ஆகஸ்ட் 24ஆம் தேதி ஜியோ போன் முன்பதிவு செய்துகொள்ளமுடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் அதிகம் பேசப்படுவது ஜியோ போன், இந்த ஜியோ போன் இந்தியா முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன் பின் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஜியோ போன் முன்பதிவு செய்துகொள்ளமுடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலவசமாக இந்த ஜியோ போன் வழங்கப்படுவதை அடுத்து பல்வேறு மக்கள் இந்த பீச்சர் போனை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதற்காக ரூ.1500 டெபாசிட் செய்ய வேண்டும் இத்தொகையை 3 வருடத்திற்க்கு பின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 24:
ஆகஸ்ட் 24-ம் தேதி ஜியோ 4ஜி பீச்சர் போனை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்பல்வேறு மக்கள் இந்த பீச்சர் போனை வாங்குவார்கள் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

ஆஃப்லைன்:
இந்த ஜியோ பீச்சர் போனை ஆப்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ள முடியும். வரும் 24ம் தேதி முதல் ஜியோ விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1500:
இந்த பீச்சர் போன் வாங்க முதலில் ரூ.1500 வரை டெபாசிட் செய்ய வேண்டும் பின்பு இந்தப் பணத்தை 3 வருடத்திற்குபின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்:
மை ஜியோ ஆப் மற்றும் ஜியோ இணையதளம் மூலம் இந்த பீச்சர் போனை முன்பதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு முன்பதிவு செய்ய கண்டிப்பாக ஆதார் எண் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக உரிமையாளர்:
வணிக உரிமையாளர் போன்றவர்கள் நிறுவனத்தின் பான் அல்லது ஜிஎஸ்டிஎன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின்புநீங்கள் எத்தனை தொலைபேசிகள் வாங்க விரும்புகிறீர்கள் என்று தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications