மார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் மார்ச் 24-ம் தேதி தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக இந்த ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அன்மையில் வெளிவந்த ஒன்பிளஸ் மாடல்களுக்கு போட்டியாகவெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி கே30 ப்ரோ சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இந்த சாதனம் 33வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா பொறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ரெட்மி கே30 ப்ரோ சாதனம் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications








