இந்தியாவில் ஒரு மில்லியன் ஸ்மார்ட் போன் விற்று அசத்திய நிறுவனம்.!
ரியல்மி நிறுவனம் ஓப்போவின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ரியல் மி2 மாடல் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 2 முதல் 5 நிமிடங்கள் வரை பிளாஷ் விற்பனையை நடைமுறையை பயன்படுத்தியது.
கடந்த 2 வாரத்தில் மட்டும் பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் மற்றும் இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன் மாடலை லட்சத்தில் விற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் விற்பனையில் தற்போது சக்கை போடு போட்டு வருகின்றது. தற்போது வெளியான மாடலுக்கு இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மாடல்கள் தற்போது ஒரு மில்லியன் அளவுக்கு விற்று சாதனை படைத்துள்ளது.

ஓப்போவின் துணை நிறுவனம்:
ரியல்மி நிறுவனம் ஓப்போவின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ரியல் மி2 மாடல் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 2 முதல் 5 நிமிடங்கள் வரை பிளாஷ் விற்பனையை நடைமுறையை பயன்படுத்தியது.

கடந்த வாரம் பிளாஷ் சேல்:
கடந்த வாரம் நடந்த இரண்டாவது பிளாஷ் விற்பனையில் சுமார் 1.7 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இரண்டு விற்பனையிலும் சேர்ந்த்து மொத்தம் 3.7 லட்சம் ரியல் மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றது.

10 லட்சத்தும் யூனிட்கள் விற்பனை:
இந்தியாவில் ரியல் 1 மற்றம் ரியல் 2 ஸ்மார்ட்போன்கள் சேர்த்து சுமார் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. ரியல்மி 1 அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரியல் மி 2 அறிமுகமாக இரண்டு வாரங்கள் ஆகியுள்ளது.

விளம்பர படம்:
ரியல்மி பிரான்டு விளம்பர படம் ஒன்றை வெளியிட்டது. நியூயார்க் நகரில் படமாக்கப்பட்ட இருக்கும் விளம்பர படத்தில் மூன்று இளைஞர்கள் வெவ்வேறு சூழ்களை எதிர்ககெள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இந்தியாவை தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளிலும் விற்பனையை துவங்க இருப்பதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல் மி 2 ப்ரோ அறிமுகம்:
முன்னதாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் அறிமுக தேதியை புதிய டீசர் புகைப்படம் மூலம் ரியல்மி அறிவித்தது. அதன்படி ரியல்மி 2 ப்ரோ ஸ்மாரட்போன் செப்டம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications