Home
Mobile

பொள்ளாச்சி 400பெண்களின் செக்ஸ் வீடியோ-மீண்டும் விசாரணைக்குள் 3 பேர்.!

மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிஐடி மாற்றப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரணை ந

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த முக்கிய விஐபிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட 1500 பாலியல் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி 400பெண்களின் செக்ஸ் வீடியோ- மீண்டும் விசாரணைக்குள் 3 பேர்.!

மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிஐடி மாற்றப்பட்டுள்ளது.

தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருநாவுக்கரசை தவிற மற்ற 3 பேரிடம் அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

பேஸ்புக் காதல் வலை:

பேஸ்புக் காதல் வலை:

பேஸ்புக்கில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என பேஸ்புக் மூலம் இவர்கள் காதல் வலை வீசியுள்ளனர். மேலும், அவர்களுடன் பாலியல் ரீதியாகவும் சேட்டிங் செய்துள்ளனர். பெண்கள் தங்களை நம்பும் வகையிலும், இனிக்க இனிக்க பேசி வசியமும் செய்துள்ளனர்.

பைனான்ஸ் மூலம் பெண்களுடன் லீலை:

பைனான்ஸ் மூலம் பெண்களுடன் லீலை:

இந்த கும்பல் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பைனான்ஸ் செய்தும் வந்துள்ளனர். மேலும், பணம் கொடுத்து விட்டு வட்டி வசூலிக்கும் போதும், அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது, வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். மேலும், தேவைப்படும் போதும் பணம் வசூலித்துள்ளனர்.

சென்னை பெண் டாக்டருக்கு மிரட்டல்:

சென்னை பெண் டாக்டருக்கு மிரட்டல்:

பேஸ்புக்கில் பேக் அக்கவுண் ஓப் செய்து, திருநாவுக்கரசு சேட் செய்து, பாலியல் லீலைகள் குறித்தும் சென்னை பெண் டாக்டருக்கும் சேட்டு செய்துள்ளனர். அப்போது, ஒரு பெண்ணை போலவே பேசி வந்துள்ளார். இதை உண்மையென நம்பி அந்த டாக்டரும் அனைத்து அந்தரங்களையும் கொட்டியுள்ளார். பிறகு, அவரை மிரட்டி பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் உறவு கொண்டுள்ளனர். அதையும் இந்த 4 பேர் கும்பல் வீடியோ எடுத்துள்ளனர்.

ஜோதிநகரை சேர்ந்த கல்லூரி மாணவி:

ஜோதிநகரை சேர்ந்த கல்லூரி மாணவி:

பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லும் போது, பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கின்றனர். அப்போது, காரில் இருந்த திருநாவுகரசு மற்றும் அவரசு கூட்டாளிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, அந்த மாணவி சத்தமிட்டுள்ளார். கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை மட்டும் கழற்றிவிட்டு, காரில் இழுந்து நடுரேத்தில் விட்டு தப்பிவிட்டனர். அங்கு பொது மக்களும் கூட்டம் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாணவியில் சகோதாரர்கள் அவர்களை விரட்டி பிடித்த போது, பல்வேறு ஆதாரங்கள் வெளியே வந்தன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

500 பாலியல் வீடியோக்கள்:

500 பாலியல் வீடியோக்கள்:

இதுவரை இந்த கும்பல் 1500 பாலியல் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளனர். இதை வைத்தும் பல்வேறு முறை அந்த பெண்களுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இதையும் மீண்டும் செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்துள்ளனர். மேலும், சுமார் 400 பெண்களுடன் அவர்கள் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.

செல்போன், லேப்டாப்களில் பாலியல் காட்சி:

செல்போன், லேப்டாப்களில் பாலியல் காட்சி:

இவர்கள் பதிவு செய்ததை காட்சிகளை லேப்டாப், செல்போன் பதிவும் செய்து கொண்டுள்ளனர். இந்த காட்சிகளை இவர்கள் ஒருவருக்கொருவர் சேர் செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவு காட்சிகளும் இருந்துள்ளது.

ஏராளமான காட்சிகள் அழிப்பு :

ஏராளமான காட்சிகள் அழிப்பு :

கடந்த ஆண்டாக பல்வேறு பெண்களுடன் அவர்கள் மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட வீடியோகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் ஏராளமான வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வலுக்கின்றனது. அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சுமார் 400 பெண்களுக்கு மேல் இருக்கலாம். சுமார் 2 ஆயிரம் வீடியோக்களும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சிபிசிஐடியிருந்து சிபிஐக்கு மாற்றம்:

சிபிசிஐடியிருந்து சிபிஐக்கு மாற்றம்:

கடந்த சில தினங்களாக பார் நாகராஜ் நிர்வாணமாக பெண்களுடன் இருக்கும் காட்சி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்களில் வலம் வந்தன. பார் நாகராஜ் இருக்கும் பல்வேறு காட்சிகளும் இருக்கின்றது. இதை பார் நாகராஜ் மறுத்து வருகின்றார். இந்நிலையில், பல வீடியோக்கள் பார் நாகராஜ் இருப்பது அழிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஐபிக்களின் மகன்களுக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் பூதாகரமாக கிளம்பியதால், தற்போது தமிழக அரசு உடனடியாக சிபிஐக்கு வழக்கை மாற்றியுள்ளனர்.

செல்போன், லேப்டாப் ஆய்வு:

செல்போன், லேப்டாப் ஆய்வு:

திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உயர்மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்களை போலீசார் ஆய்வு சோதனை செய்த போது, அதில் சுமார் 10 வீடியோக்களை வரையே கிடைத்துள்ளது. மேலும், ஏராளமான பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு அதை வீடியோ எடுத்துள்ளனர். பிறகு பணம் வசூலித்த பிறகு அதை அழித்துள்ளனர். ஏராளமான வீடியோக்கள் இருப்பதால் மீட்டு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள்.

சிபிஐ வசம் வழக்கு:

சிபிஐ வசம் வழக்கு:

தற்போது வழக்கு சிபிஐ வசம் வழக்கு சென்றியிருப்பதால், முக்கிய புள்ளிகள் குறித்தும் இந்த வழக்கு விசாரணையில் வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கின் உண்மை முகம் கிழித்து தொங்கவிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இதில் யார் யாருக்கு தொடர்பிருக்கின்றது. மேலும், அழிக்கப்பட்டுள்ள வீடியோக்களை மீட்க செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்து, ரெக்கவர் பைல் எடுக்கப்படுகின்றது. இதனால் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என்று ஏராளமானோர் இருக்கின்றனர்.

திருநாவுக்கரசிடம் விசாரணை:

திருநாவுக்கரசிடம் விசாரணை:

திருநாவுக்கரசுவிடம் 4 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ராஜ்குமாருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இதில் நக்கீரன் கோபால் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 பேரிடம் விசாரணை:

3 பேரிடம் விசாரணை:

இந்த நிலையில், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி கோரி ஓரிரு தினங்களில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே திருநாவுக்கரசுவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர்களுக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Pollachis sex case has been decided to investigate 3 more people : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X