ஆஷா வரிசையில் புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா!

By Super
|

ஆஷா வரிசையில் புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா!
நோக்கியா நிறுவனம் புதிய ஆஷா-305 என்ற டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஆஷா வரிசை மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இதனால் நோக்கியா நிறுவனம் ஆஷா வரிசையில் புதிய மொபைலாக ஆஷா-305 என்ற மொபைலை உருவாக்கி உள்ளது. தொடு திரை வசதி கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்ட மொபைல்களாகும்.

ஆஷா-305 மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலாகும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. டியூவல் சிம் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். சில மொபைல்கள் நிறைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். ஆனால் சிறப்பான பேட்டரி பேக்கப் வசதி இருக்காது.

ஆனால் இந்த மொபைலில் உள்ள தொழில் நுட்ப வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் வகையில் இந்த மொபைலில் 1,100 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 528 மணி நேரம் ஸ்டான்-பை டைமை வழங்கும்.

நோக்கியா நிறுவனம் ஆஷா-202, ஆஷா-302 மொபைல் என்ற மொபைல்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஆஷா-305 மொபைலை ரூ. 4,668 விலையில் பெறலாம்.

ஆஷா-202 மற்றும் ஆஷா-302 மொபைல் ரூ. 4,149 விலையினையும், ரூ. 6,919 விலையினையும் கொண்டது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X