மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 5-ம் தேதி பெர்லினில் நடைபெறும் ஐஎஃப் 2019 நிகழ்வில் அறிமுகப்படுதத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் ஆன்லைனில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சில குறிப்புகள் வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மிகப் பெரிய வரவேறப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான புகைப்படம் அடைப்படியில் நோக்கியா 7.2 ஆனது அதன் பின்புறத்தில் ஒரு வட்ட வடிவிலான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பின்பு நோக்கியா 7.2 சாதனத்தின் சிறப்பம்சமாக அதன் மெல்லிய வடிவம் திகழும் என்பதையும்,அதன் பின்புறத்தில் இடம்பெறும் வட்ட வடிவிலான கேமரா தொகுதியானது மூன்று கேமரா சென்சார்களையும், உடன் ஒரு எல்இடி பிளாஷை கொண்டுள்ளதையும் பார்க்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி வழங்கப்பட்டுள்ளது, பின்பு முன் பக்கத்தில் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் கண்டிப்பாக 6.2-இன்ச் அல்லது 6.3-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம், பின்பு குவால்காம் ஸ்டனாப்டிராகன்710 சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்ப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications