மும்பை ரயில் நிலையத்தில் தொடரும் செல்போன் திருட்டு சம்பவம்.!
கூகுள் கணக்கில் உள்ள ட்ரேஸ் மை மொபைல் என்ற விருப்பத்தின் மூலம் தனது ஸ்மார்ட்போனை மிகவும் எளிமையாக கண்டுபிடித்துள்ளார் பானு .
இப்போது ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் கடிமாகதான் இருக்கறது என்று கூறவேண்டும், அதன்படி மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது நண்பர் மொபைல் போன் உதவியுடன் தொலைந்த தனது ஸ்மார்ட்போன் கண்டுபிடித்துள்ளார். மும்பை ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் ஸ்மார்ட்போன்; திருடப்பட்டுள்ளது.

பானு எனப்படும் அந்த கல்லூரி மாணவி தனது நண்பர் மொபைல் போனில் ஆன்லைன் மூலம் தனது ஸ்மார்ட்போனை கண்காணித்து மிகவும் பத்திரமாக ஸ்மார்ட்போனை மீட்டுள்ளார். குறிப்பாக அந்த பெண் தனது கூகுள் கணக்கு மூலம்
உள்நுழைந்து ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட நேரம் கண்காணித்துள்ளார்.

ட்ரேஸ் மை மொபைல்
கூகுள் கணக்கில் உள்ள ட்ரேஸ் மை மொபைல் என்ற விருப்பத்தின் மூலம் தனது ஸ்மார்ட்போனை மிகவும் எளிமையாக கண்டுபிடித்துள்ளார் பானு . மேலும் இந்த மொபைல் போனில் ட்ரேஸ் மை மொபைல் என்ற விருப்பத்திற்கு கடவுசொல் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேலும் பானு-வின் ஸ்மார்ட்போனை திருடிய செல்வராஜ் என்பவர் ரயில்வே காவலர்களிடம்
ஒப்படைக்கப்பட்டார்.

சாகசம்
ரயிலில் தொங்கியப்படியே பயணம் செய்வது ஆபத்தான என்றும், தடையை மீறி பயணம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு பலமுறை எச்சரித்துள்ளது. இருந்த போதும் இளைஞர்கள் சிலர், ரயில் தொங்கிப்படியே பயணம் செய்வது, படிக்கட்டில் சாகசம் செய்வது என தொடர்ந்து ஆபத்தான செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றன.

வீடியோ
அப்படியொரு சம்பவம் தான் கடந்த ஆக்ஸ்ட் 1-ம் தேதி மும்பையில் அரங்கேறியுள்ளது. அதிலும் இளைஞர்கள் ரயிலில் சாகசம் செய்துக் கொண்டே மொபைல் திருட்டில் ஈடுப்பட்டு இருப்பது மும்பை போலீசாரை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மும்பை போலீசார்:
இந்த வீடியோவைப் பார்த்த மும்பை போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும்இ செல்ஃபோனை பறிக் கொடுத்த நபரிடம் இதுக் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications