மோட்டோரோலா இஎக்ஸ்-109 மற்றும் மேக்ஸ் ஸ்கோப்-150 - ஒரு ஒப்பீடு

பன்னாட்டு நிறுவனமான மோட்டோரோலாவும் இந்திய நிறுவனமான மாக்ஸும் விலையிலும் தரத்திலும் சிறந்த டூவல் சிம் மற்றும் டச் ஸ்மார்ட் போன்களை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றன.
மோட்டோரோலா இஎக்ஸ்-109 கிவெர்ட்டி கீபேடுடன் 2 இஞ்ச் திரையில் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளேயை வழங்குகிறது. ஆனால் மேக்ஸ் ஸ்கோப்-150 2.8 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையை வழங்குகிறது. கேமரா வசதியைப் பார்த்தால் மோட்டோரோலா இஎக்ஸ்-109 போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. ஆனால் மேக்ஸ் ஸ்கோப்-150 1.3 மெகா பிக்ஸல் கேமராவையே வழங்குகிறது.
மோட்டோரோலா இஎக்ஸ்-109 பார்ப்பதற்கு மேக்ஸ் ஸ்கோப்150வை விட குறைந்த வசதிகளை கொண்டிருக்கிறது.மெமரி சேமிப்பு வசதியைப் பார்த்தால் மோட்டோரோலா எக்ஸ்-109 போன் 23ஜிபியையும் மேக்ஸ் ஸ்கோப்-150 போன் 8ஜிபியையும் சேமிப்பு திறனையும் பெற்றுள்ளன.
இரணடு மொபைல்களுமே டூவல் சிம் கொண்டவை. ப்ளூடூத் தொடர்பு, எப்எம் ரேடியோ, வீடியோ ப்ளேயர் மற்றும் மீயூசிக் ப்ளேயர் போன்ற அத்தனை அம்சங்களையும் இரண்டிற்கும் பொதுவாக உள்ளன.
விலையை எடுத்துக் கொணடால் மோட்டோரோலா இஎக்ஸ்-109 ரூ.3,275க்கும், மேக்ஸ் ஸ்கோப்-150, ரூ.3,249க்கும் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மொபைல்களுமே வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications