இரு திரை கொண்ட ஆறு அதிநவீன கைபேசிகள்.!!
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பலான ஸ்மார்ட்போன்களில் ஒரு திரை மட்டுமே இருக்கின்றது. ப்ளிப் போன்களின் காலம் முடிந்து விட்டது என்ற நிலையில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ப்ளிப் போன் வடிவில் இரு திரை கொண்ட கருவிகளை தயாரிக்க துவங்கியுள்ளனர்.

கியோசெரா ட்யூரா எக்ஸ்ஏ
2.4 இன்ச் திரை கொண்ட இந்த கருவியில் க்யூவிஜிஏ டிஸ்ப்ளே மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி10
5.7 இன்ச் குவாட் எச்டி மற்றும் 2.1 இன்ச் சிறிய திரை கொண்ட கருவி என்பதோடு 4 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி ப்ரைமரி கேமரா போன்றவை இந்த கருவியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் எனலாம்.

சாம்சங் கேலக்ஸி கோல்டன் 3
கடந்த மாதம் சீனாவில் வெளியான இந்த கருவியே தற்சமயம் வரை அதிநவீன சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் க்ளாம்ஷெல் கருவியாகும்.

சாம்சங் ரக்பீ 4
அதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட பீச்சர் போன் தான் சாமசங் ரக்பீ. 1.3 இன்ச் மற்றும் 2.4 இன்ச் என இரு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

டேக் ஹியுர் மெர்டிஸ்ட் இன்ஃபைனட்
விலை உயர்ந்த இந்த கருவியில் 2.4 இன்ச் திரை மற்றும் நோட்டிபிகேஷன்களுக்காக ஒரு திரை பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

யோடா போன் 2
ஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் யோடாபோன் 2 கருவியில் 5 இன்ச் மற்றும் 4.7 இன்ச் என இரு திரை வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications