இந்தியா: மிகவும் எதிர்பாத்த சியோமி பேன்ட் மற்றும் கண்காணிப்புக் கேமரா அறிமுகம்.!
சியோமி மி பேன்ட் 3 சாதனம் பொறுத்தவரை 0.7-இன்ச் ஒஎல்இடி பிக்சல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது சியோமி நிறுவனம், அதன்படி சியோமி பேன்ட் மற்றும் கண்காணிப்புக் கேமரா, சியோமி டிவி, ஏர் ப்யூரிஃபையர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக சியோமி பேன்ட் சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சியோமி ஏர் ப்யூரிஃபையர் சாதனம் ரூ.8,999 விலையில் வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கண்காணிப்புக் கேமராக்களில் பயன்படுத்தப்படும் . ர்.265 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய தரவை சேமிக்க சியோமி கேமரா உதவுகிறது. குறிப்பாக இந்த சாதனம் வரும் அக்டோபர் 10 ம் தேதி முதல் அமேசான், ஃப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி மி பேன்ட் 3 சாதனம் பொறுத்தவரை 0.7-இன்ச் ஒஎல்இடி பிக்சல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங் போட்டோப்லெதிஸ்மோகிராஃபி, இதய துடிப்பு சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது இந்த சாதனம், செடன்ட்டரி ரிமைன்டர், வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற அம்சங்களும், ப்ளூடூத், என்எஃப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
பின்பு இந்த பேன்ட் சாதனத்தில் 110எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் இதன் விற்பனை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications