ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மெய்ஸூ 15 பிளஸ்.!
ஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர் போன்ற தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்ஸூ நிறுவனம் விரைவில் புதிய மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஃபுல் வியூ பெரிய டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெசல்-லெஸ்:
மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பெசல்-லெஸ் வடிவமைப்பு, 18:9 திரைவிகிதம் மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
இக்கருவியில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கைரேகை ஸ்கேனர் :
ஹோம் பட்டன், கைரேகை ஸ்கேனர் போன்ற தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனத் தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள் :
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டூயல் கேமரா:
இந்த மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதன் லென்ஸ்கள் செங்குத்தாக உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி:
மெய்ஸூ 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications