நடப்பு நிதிஆண்டிற்குள் புதிதாக 40 மொபைல்போன்கள்: மேக்ஸ் திட்டம்

By Super
|
நடப்பு நிதிஆண்டிற்குள் புதிதாக 40 மொபைல்போன்கள்: மேக்ஸ் திட்டம்
மும்பை: மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டிற்குள் 40 புதிய மொபைல்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய மொபைல்போன் மார்க்கெட்டில் மேக்ஸ் மொபைல்ஸ் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. அடித்தட்டு மற்றும் நடுத்தர பிரிவு மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த நிறுவனம் அடுத்த மொபைல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

சந்தையில் 15 மாடல்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டிற்குள் 40 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேக்ஸ் மொபைல்ஸ் தலைவர் அஜய் அகர்வால் கூறியதாவது:

"சந்தையில் தற்போது 3 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளோம். இதை வெகுவாக உயர்த்தும் வகையில் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் புதிதாக 40 மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த போன்கள் ரூ.5,000 முதல் ரூ.8,000 விலையில் அறிமுகம் செய்யப்படும். புதிய வரும் காலாண்டில் 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும். நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட உயரிய ரக ஸ்மார்ட்போனை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது," என்றார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X