ஜியோபோனுக்கு வந்த சோதனை.! அம்பானியின் பலே திட்டம்.!
இந்தியாவில் ஜியோபோன் மாடல்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது, காரணம் மலிவு விலையில் சிறந்த அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது தான். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் அதன் ஒரிஜினல் ஜியோபோனின் விலையை ரூ.300 ஆக உயர்த்த உள்ளதாகவும், அதன்பின்பு ஒரிஜினல் ஜியோபோனின் விலை ரூ.999-ஆக உயரும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் 91 மொபைல்ஸ் வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் ஆதாரங்களை மேற்கொள்
காட்டி ஜியோ நிறுவனம் தனது ஜியோபோனின் விலையை உயர்த்த தயாராக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளியின் போது ரூ.699-க்கு ஜியோபோன் என்றசலுகையை அறிமுகம் செய்தது, அதே சலுகை இப்போது வரை கிடைக்கிறது.

ஆனால் கடந்த ஆண்டு இந்த சலுகையை அறிமுகம் செய்தபோது, இது ஒரு வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம் என்று ஜியோ நிறுவனம் கூறி இருந்தது. எனவே அதை முடித்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் போனதால், ஜியோ ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த சலுகையை தக்கவைத்திருக்கலாம். ஆனால் தற்போது இந்த சலுகையானது ஒரு முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது.

அதேசமயம் ஜியோபோனின் விலையை அதிகரிப்பதோடு, குறிப்பிட்ட பீச்சர் போனை வாங்கும் போது அதனுடன் ரூ.125 ரீசார்ஜ் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஜியோபோனின் ஒட்டுமொத்த விலையையும் ரூ.1,124 ஆக மாற்றும் எனத் தெரியவந்துள்ளது.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது, தற்போது வரை இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் கூட இந்த செய்தி குறித்து நிறுவனம் எதிர்வரும் நாட்களில் திகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும்.
இந்நிறுவனம் தீபாவளி 2019 சலுகையை அறிமுகப்படுத்தியபோது, அது அனைவரையும் கவர்ந்தது என்றுதான் கூறவேண்டும், ஏனெனில் இது ஒரு பீச்சர் போனாக இருந்தாலும் கூட ஜியோவின் 4ஜி எல்டிஇ நெட்வொர்ககில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்து.

மேலும் தீபாவளி 2019 சலுகையின் சிறந்த பகுதியாக ரூ.1500 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையும் அகற்றப்பட்டது. பயனர்கள்அனைவரும் ஒரு ஜியோபோனுக்கு செலுத்த வேண்டியது ரூ.699 மற்றும் ரூ.99 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ் மட்டுமே ஆகும்.

அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் பயனர்கள் ஜியோ போனை திருப்பி அனுப்பினால் அவருக்கு ரூ.299 வரை திருப்பித் தரப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தீபாவளி 2019 சலுகையின் கீழ் ஜியோபோனை வாங்கிய ஒவ்வொரு பயனருக்கும் ரூ.99 மதிப்புள்ள டேட்டா பேக்கையும் ஜியோ வழங்கியது. இருந்தபோதிலும் பயனர்கள் இலவசமாக ரூ.99 டேட்டா பேக் நன்மையைப் பெற மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் அதன் ஜியோபோன் விலையை ரூ.999-ஆக உயர்த்த பார்க்கிறது. இந்த விலை உயர்விற்குபின்னர் முதல் ஏழு ரீசார்ஜ்களின் வழியாக அணுக கிடைத்த கூடுதல் டேட்டா பேக் சலுகை தக்கவைக்கப்படுமா என்பதுதெளிவாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications