விரைவில் : ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகம்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் பேமென்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் பேமென்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இனைந்து இந்த சேவையை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இதன் சேவைகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது, அந்த வரிசையில் ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள்
வெளியாகியுள்ளது.

பேமென்ட் பேங்க்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இனைந்து பேமென்ட் சேவையை
தொடங்க திட்டமிட்டுள்ளது, அதன்பின் இந்த சேவை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆகஸ்ட் 31:
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 13 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர், மேலும்ஜியோ இன்டர்நெட் வேகம் பொறுத்தவரை மிக அருமையாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அக்டோபர்:
இந்த ஜியோ பேமென்ட் பேங்க் அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் சீரானவழிமுறைகளை செயல்படுத்தக் கோரி கேட்டுக் கொண்டதால் இதன் வெளியீடு தாமதமானது.

5ஜி நெட்வொர்க்:
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் அனைத்து ஐபி நெட்வொர்க்குகளையும் கொண்டுள்ளது, ஆக அதன் 4ஜி நெட்வொர்க்கை மிக எளிதாக 5ஜி மற்றும் அதற்கு மேலான தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தலாம்

ரிலையன்ஸ் ஜியோ
வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தமது எதிர்கால 5ஜி நெட்வர்க் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது அவர்கள் தமது நெட்வொர்க்குகளில் ஒரு பெரிய அளவிலான மிமோ (ஆஐஆழு) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications