அக்டோபர் 16 முதல் இந்தியாவில் புதிய ஐபோன் கருவிகள்..!!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 6எஸ், மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!! என்ன கதை உடுறியா..??

அதன்படி புதிய ஐபோன் கருவிகள் அக்டோபர் 16 ஆம் தேதி அதிகைலை சுமார் 12.01 மணி முதல் இந்தியா முழுவதிலும் சுமார் 80 நகரங்களில் இருக்கும் 2500 வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என மைக்ரோ இந்தியா எனும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவில் அம்மா ஸ்மார்ட்போன்..!!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் வெளியாவது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+, சாம்சங் கேலக்ஸி நோட் 5 போன்ற கருவிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றே தெரிகின்றது.
ரூ.999க்கு பீச்சர் போன்களே போதும் பாஸ்..!!

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியான இந்த கருவிகள் தற்சமயம் அமெரிக்கா, ப்ரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications