ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் கொண்ட முதல் மொபைல்!

By Super
|

ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் கொண்ட முதல் மொபைல்!
மொபைல் உலகிற்கு சவால்விடும் நிறுவனங்களில் எச்டிசி நிறுவனம் பெரிய பங்கு வகிக்கிறது.

அந்த வரிசையில் புதிய ஹைவேரியண்ட் அம்சங்கள் கொண்ட வில்லே என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது.

க்யூவல்காம் எஸ்-4 தொழில் நுட்பத்துடன் வரும் முதல் எச்டிசி மொபைலாக இது மார்க்கெட்டிற்கு வருகிறது.

இந்த மொபைலில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்வெஜ் வெர்ஷன் ஆப்பரேட்டிங் இயங்குதளத்தில் இயங்குகிறது.

ஆன்ட்ராய்டு சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில், இதில் 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஸ்னாப்டிரான் எஸ்-4 பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த மொபைல் 4.3 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் 8 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதனால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும். இதில் செகன்டரி கேமரா உள்ளதை பற்றி எந்த தகவலும் இல்லை.

எச்டிசி வில்லே மொபைலின் நீடித்து உழைக்கும் 1650 எம்ஏஎச் பேட்டரி, இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க துணை புரிகிறது.

இந்த மொபைல் வருகிற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X