புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எச்டிசி!

By Super
|

புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எச்டிசி!
இப்பொழுதெல்லாம் வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் விலையை கேட்டால் அடேங்கப்பா! என்று சொல்ல வைக்கும் விலையாக உள்ளன. ஆனாலும் அதன் தொழில் நுட்பங்களும் ஆச்சர்யமூட்டும் வகையில் தான் இருக்கின்றன.

எச்டிசி நிறுவனம் புதிய ஒன் வரிசை ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் 15-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குவதாக இருக்கும்.

ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்டது. 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். அகன்ற திரை என்றாலே மற்றவர்கள் வெகுவாக ஈர்க்கும் மாயங்களை செய்யும் தன்மை கொண்டது.

119.5 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்-4 க்ரெய்ட் பிராசஸரின் மூலம் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க எளிதாக சப்போர்ட் செய்யும்.

அழகாக புகைப்படம் எடுத்து கொள்ளும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். அந்த அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பெறலாம். இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் வைபை தொழில் நுட்பம் சிறப்பான இன்டர்நெட் வசதியினை வழங்கும். 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்டது இந்த ஸ்மார்ட்போன். 3ஜி தொழில் நுட்பத்தினையும் ஸ்மார்ட்போம் கொடுக்கும்.

இந்த மாதம் 15-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 33,000 விலை கொண்டது. இன்னும் சில ஆன்லைன்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு ப்ரீ-ஆடர் விற்பனையை துவங்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X