விரைவில் : நோக்கியா அறிமுகப்படுத்தும் 4ஜி பீச்சர்போன்.!
தற்சமயம் ஜியோபோனுக்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் மலிவு விலையில் மொபைல் போன்களை வெளியிட தயாராகி வருகிறது.
விரைவில் ஜியோவிற்க்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் 4ஜி பீச்சர்போனை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் இப்போது ஜியோபோன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் தற்போது நோக்கியா பிரான்டிங் கொண்ட 4ஜி மொபைல் போன் ஒன்றை அந்நிறுவனம் தயாரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா:
தற்சமயம் ஜியோபோனுக்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் மலிவு விலையில் மொபைல் போன்களை வெளியிட தயாராகி வருகிறது.மேலும் இவற்றில் 4ஜி தொழில்நுட்பம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் மேத்தா:
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் அஜய் மேத்தா தெரிவித்தது என்னவென்றால் இந்தியா முழுவதும் ஜியோபோனுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது, இதற்க்கு போட்டியாக நோக்கியா 4ஜி பீச்சர்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மொபைல் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
விரைவில் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட பீச்சர்போனை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எச்எம்டி குளோபல் தகவல் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3310
நோக்கியா 3310 3ஜி வசதி கொண்ட மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்ந மொபைல் மாடல் பல்வேறு வரவேற்ப்பைபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications