இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு! இதற்கு காரணம் இது தான்!
இந்தியாவில் மொபைல் போன்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி அண்மையில் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஐபோன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னாள் மட்டும் ஐபோனின் விலை என்ன குறைவாக இருந்தது என்று நீங்கள் கேட்கலாம், உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆனால், இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைக் கேட்டால் பழைய விலை நிச்சயம் குறைவாகத் தான் தெரியும்.

ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் XR மற்றும் ஐபோன் XS உள்ளிட்ட ஐபோன் மாடல்களின் விலை இப்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி தவணை திட்டத்தில் ஐபோன் வாங்க வேண்டும் என்ற நினைப்பவர்களின் நிலையும் சற்று மோசம் தான்.

விலை உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன் மாடல்களின் விலையை உயர்த்தியது. இறக்குமதி உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐபோன்களுக்கான வரி இப்பொழுது 5.15 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

1.5 லட்சத்தை எட்டிய ஆப்பிள் ஐபோன்
புதிய விலை உயர்வின் படி பேஸ் வேரியண்ட் ஐபோன் 7 மாடலின் 32 ஜி.பி. வேரியண்ட் ரூ.29,900 என்ற விலையிலிருந்து ரூ.31,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஹை-எண்ட் மாடலான ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலின் 512 ஜி.பி. வேரியண்ட் ரூ.1,43,200 என்ற விலையில் இருந்து இப்பொழுது ரூ.1,50,800 என்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஐபோன் மாடலின் விலையும் முந்தைய விலையை விட 5.3 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் சலுகையுடன் ஐபோன் வாங்கலாம்
இப்பொதுவரை தனது எம்ஆர்பி விலையிலேயே ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மூலம் சில இடங்களில் ஐபோன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் தளங்களில் குறைந்த விலையில் சலுகையுடன் உங்களால் ஐபோன்களை வாங்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் விலையும் அதிகரிப்பு
இந்தியவைல் விதிக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி உயர்வை தொடர்ந்து சாம்சங், ஒப்போ, விவோ, ரியல்மி, ரெட்மி மற்றும் ஐகூ போன்ற பெரும்பாலான நிறுவனங்களின் தயாரிப்புகளிற்கும் இந்த நிலையே இப்போது. அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விலையும் தற்பொழுது அதிகரித்து.


Click it and Unblock the Notifications