உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி சேவை வழங்க அரசு தடை!

By Super
|

உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி சேவை வழங்க அரசு தடை!
முன்நிலை வகித்து வரும் பாரதி ஏர்டெல், வோடாபோன மற்றும் ஐடியா செலுலார் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெறாத இடங்களில் 3ஜி சேவை வழங்குவதை நிறுத்த கோரியுள்ளது இந்திய தொலை தொடர்பு துறை.

ரோமிங் தொலைதொடர்பு உடன்படிக்கைகளின் மூலம், தொலை தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி குரல் பதிவு சேவை வழங்குவதை நிறுத்தும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உரிமம் பெற்ற பகுதிகளில் மட்டுமே 3ஜி சேவையை வழங்க வேணடும். அதிலும் உரிமம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே 3ஜி சேவையை வழங்கும் அதிகாரமும் உள்ளது. ஆனால் உரிமம் இல்லாத பகுதிகளில் 3ஜி சேவை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி சேவை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி முன்னமே ஆலோசனை அறிவிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தொலை தொடர்பு செயலாளர் ஆர். சந்திரசேகர் சிஐஐ மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

மொபைபோன் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகள், 3ஜி ரோமிங் உடன்படிக்கையின்படி வருகிற டிசம்பர் 23ம் தேதி அமல்படுத்துவதாகவும் இந்திய தொலை தொடர்பு துறை தெரிவித்திருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X