பேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.!
தற்போது ஆப்பிள் மற்றும் பேஸ்புக்கு நிறுவனத்திற்கும் இடையே நிலவுகின்றது. இந்நிலையில், பேஸ்புக் கூகுள் நிறுவனத்தின் வேலை செய்வோர் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்களது இதன் விளக்கம் குறித்து பின்னே தெரிவிக்கின்றேன். காஞ்சனா படத்தில் வரும் டயலாக் தான். இதில் என்ன சிறப்பு என்றால் இரண்டு பேயிகளும் சண்டையிட்டுக் கொள்ளும்.
அப்போது, ராகவா லாரன்ஸ் இரண்டு பேயிக்கும் பேயிக்கு சண்டை ஊரே பார்த்து சிரிக்கின்றது என்று கூறுவார்.

இது தற்போது ஆப்பிள் மற்றும் பேஸ்புக்கு நிறுவனத்திற்கும் இடையே நிலவுகின்றது. இந்நிலையில், பேஸ்புக் கூகுள் நிறுவனத்தின் வேலை செய்வோர் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து உலகமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.

பேஸ்புக் நிறுவனம்:
பேஸ்புக் நிறுவனம் தற்போது சமூக ஊடங்களில் முன்னணியில் இருகின்றது. மேலும் இந்த நிறுவனம் வாட்ஸ் செயலியையும் வழங்கின்றது. பேஸ்புக் மூலம் தினசரி ஏராளமான கருத்துக்களையும் உலகம் முழுக்க பரப்படுகின்றது.
பேஸ்புக் நிறுவனத்தால் ஏராளமான நன்மைகள் பொது மக்களுக்கு நடந்துள்ளது. இன்றுவரை இளைஞர் முதல் முதியோர் வரை பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம்:
ஆப்பிள் நிறுவனம் ஐ போன், வாட்ச், ஐ போடு, ஐ பாட், கணிணி உள்ளிட்ட தயாரிப்புகளையும் பொது மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனி ஸ்டைலும், அதில் உள்ள வசதிகளும் பிறரால் ஹேக் செய்ய முடியாத நிலையும் இருப்பதால் ஏராளமானோர் ஆப்பிள் பிராண்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

சண்டையிக்கு பிள்ளையார் சுழி:
அண்மையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆப்பிள் சி.இ.ஓ.,டிம் குக்கிடம், அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பகிரங்கமாக போட்டு உடைத்தார்:
இதற்கு பதில் அளித்த சற்றும் யோசிக்காமல் டிம் குக், தனிநபர் வாழ்வில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று கூறினார். இந்த செய்தியும் காட்டுத் தீ போல் வேகமாக பரவியது. இதுகுறித்தும் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் தெரிவிக்கப்பட்டது.

கடும் ஆத்திரம்:
பொதுவெளியில் இவர் இவ்வாறு பேசியதால் பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் ஆத்திரமுற்றுள்ளார். டிக் குக் மீது உள்ள ஆத்திரத்தால், தனது நிறுவனத்தில் பணிபுரிவோர், ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சண்டையால் போனுக்கு வந்த தடை:
தற்போது இந்த சண்டையால் பாதிக்கப்பட்டது என்னவோ பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் தான். தங்களின் ஊதியத்தில் ஐபோனை வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். தற்போது எங்களின் போன்களுக்கு பயன்படுத்த தடையாக வந்து விட்டது. இந்த விவகாரம் பேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சரிக்கு போல் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications