சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பேஸ்புக் : வேறலெவல்.!
பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது, தற்சமயம் இந்நிறுவனம் தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இதைக் கொண்ட ஃபேஸ்புக்கில் க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நிதி நிறுவனங்கள்
பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கிரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு பிட்காயின் இணையான டிஜிட்டல் காயின்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

பிளாக்செயின்
குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் அவர்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஆத்தின்டிகேஷன்
மீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன் என்று மார்க் அவர்கள் கூறியுள்ளார். பின்பு இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பு செயலி
மேலும் பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும் பேஸ்புக் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல்
பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications