Home
Mobile

8ம் வகுப்பு வரை படித்து ஐ போனை ஹேக் செய்யும் பலே திருடன்.!

சென்னையில் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, ஐ போனைகளை ஹேச் செய்து, திருடி விற்பனை செய்யும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐ போனை எவ்வாறு திருடி விற்பனை செய்துவதை கேட்டும் போலீசார் திகைத்துப்

சென்னையில் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, ஐ போன்களை ஹேச் செய்து, திருடி விற்பனை செய்யும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

8ம் வகுப்பு வரை படித்து ஐ போனை ஹேக் செய்யும் பலே திருடன்.!

ஐ போனை எவ்வாறு திருடி விற்பனை செய்துவதை கேட்டும் போலீசார் திகைத்துப் போயியுள்ளனர். மேலும், இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணையும் நடக்கின்றது.

அடுத்தடுத்து ஐ போன் கொள்ளை:

அடுத்தடுத்து ஐ போன் கொள்ளை:

சென்னை பாண்டிபஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9ஆம் தேதி விலை உயர்ந்த ஐபோன் எக்ஸ் போன்கள் வழிப்பறி செய்யப்பட்டன. செல்போன்களை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடுத்தடுத்து ஐபோன்கள் வழிப்பறி தொடர்ந்தது. இதனால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

எஸ்எம் எஸ்எஸ் வருகின்றது:

எஸ்எம் எஸ்எஸ் வருகின்றது:

இதனிடையே ஐபோனை பறிகொடுத்த ஒருவரின் மற்றொரு மொபைல் நம்பருக்கு ஐபோனைத் தொலைத்த மறுநாள் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு அதற்குச் சென்றால் தொலைத்த ஐபோனை மீட்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. அப்படி இந்த இணையப் பக்கத்திற்குச் சென்றால் ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்யுமாறு கேட்டிருக்கிறது.

போலீசார் முயற்சி:

போலீசார் முயற்சி:

இது குறித்து அந்த இளைஞர் போலீசார் தகவல் தெரிவித்ததால், எஸ்எம்எஸ் அனுப்பிய மொபைல் நம்பருக்கு உரிய முகவரியை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொடுங்கையூரை சேர்ந்த ஒருவரின் பெயரில் அந்த மொபைல் நம்பர் பதிவாகியுள்ளது தெரியவந்தது. போலீசார் அந்த கொடுங்கையூர் நபரிடம் விசாரித்தபோது, அவர் அந்த நம்பர் தன்னுடையது அல்ல என்று மறுத்திருக்கிறார்.

பிடிக்கப்பட்ட இளைஞர்:

பிடிக்கப்பட்ட இளைஞர்:

விசாரணையைத் தொடர்ந்த போலீசார் சென்னை பெரம்பூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 26 வயதான இவர் செல்போன் கடை நடத்திவருபவர். இவர்தான் ஐபோன்களைத் திருடிச் சென்று ஹேக் செய்து குறைந்த விலைக்கு விற்கிறார் என்று தெரியவந்துள்ளது.

ஐடி மற்றும் பார்ஸ்வேடு கேட்கிறது:

ஐடி மற்றும் பார்ஸ்வேடு கேட்கிறது:

அப்துல் ரஹ்மான் திருடிய மொபைல்களில் உள்ள சிம்கார்டை கழற்றிவிட்டு, வேறு சிம்கார்டை போடும்போது போனை பறிகொடுத்த உரிமையாளரின் மற்றொரு எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அதில் உள்ள முன்னர் கூறியபடி ஒரு லிங்க் இருக்கும். அதன் மூலம் திறக்கும் இணையப் பக்கதுக்குச் சென்றால் ஐபோனின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கேட்கும்.

போனும் பறிபோய் விடுகின்றது:

போனும் பறிபோய் விடுகின்றது:

போனை திரும்பப் பெறும் ஆசையில் உரிமையாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்வார். ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை. அவர் டைப் செய்த ஐடி மற்றும் பாஸ்வேர்டு அப்துல் ரஹ்மானுக்குக் கிடைத்துவிடும்! அதை வைத்து தன் கையில் உள்ள ஐபோனை தனக்குச் சொந்தமாக்கிவிடுவார்!

தொழில்நுட்பத்தை ஹேக்

தொழில்நுட்பத்தை ஹேக்

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அப்துல் ரஹ்மான் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஹேக் செய்திருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

Best Mobiles in India

English summary
chennai man arrested for hacking iphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X