ஏர்டெல்: மினிமம் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: அதிரடி அறிவிப்பு.!
ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி பார்தி ஏர்டெல் நிறுவனம் கட்டயா மினிமம் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, அதைப் பற்றி முழு விவரங்களையும் பார்ப்போம்.

மினிமம் ப்ரீபெய்டு ரீசார்ஜ்
மினிமம் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 23 ரூபாயிலிருந்து தற்சமயம் 45ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 45ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தைச் செலுத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.

28நாட்களுக்கான சேவை வழங்கப்படும்
நீங்கள் 45ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பாரதி ஏர்டெல் மற்றும் பாரதி ஹெக்சாகாம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அத்தனைப் பேருக்கும் இந்தக் கட்டணம்பொருந்தும்.

கருணைக் காலம்
குறிப்பாக 45ரூபாய் கட்டாய கட்டணம் செலுத்த 15நாட்கள் வரையில் கருணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டாய மினிமம் பேலன்ஸ் செலுத்தப்பட்ட சேவைகள் துண்டிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாரதி மிட்டல்
அன்மையில் பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் பாரதி மிட்டல், அதிகப்படியான சலுகைகளால் இந்திய டெலிகாம்துறையை அழித்து வருகிறோம். டிராய் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

3 ஜிபி டேட்டா
சமீபத்தில் ரூ.558 திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் முந்தைய சலுகைகளை அப்படியே வழங்கியிருந்தாலும், திட்டத்துக்கான காலக்கட்டத்தை மட்டும் குறைத்திருக்கிறது. ரூ.558 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் முன்னதாக 82 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தினசரி 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகிய அதே சலுகைகளுடன் 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications