கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.! மத்திய அரசு.! ஏன்?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகுவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கூகுள் குரோம் பற்றி ஒரு செய்தி வந்துள்ளது, அதைப் பற்றி விரிவாக்கப் பார்ப்போம்.

அதாவது கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும் என மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

வெளிவந்த தகவல் அடிப்படையில் பயனாளர்களின் தகவல்களை திருடும் 100-க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளைகூகுள் நிறுவனம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது. இதை தொரடந்தே மத்;திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியாவில் இணையவழி தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும்,இணைய வழித்தடத்தை பாதுகாப்பதற்கும் தேசியதொழில்நுட்பக் குழுவான இந்திய இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை பதில் குழு (சி.இ.ஆர்.டிஇன்) செயல்படுகிறது .

மேலும் மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமாக இந்த நிறுவனம் இணைய பயனர்களுக்கு முற்றிலும் தேவைப்படும் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே நிறுவவும்,அவ்வாறு செய்வதற்கு முன்பு பயனர் மதிப்புரைகளைப் பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு பயன்பாட்டில் இல்லாத எக்ஸ்டென்ஷன்களை நீக்கம் செய்த வேண்டும், அதேசமயம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கப்படாத தளங்களில் இருந்து எக்ஸ்டென்ஷன்களை நிறுவக்கூடாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்மையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக டிக்டாக் செயலியில் இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்களது அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என விபரீத முடிவுகள் எடுத்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் செயலி முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications