கால் பாக்கெட்டில் இருந்த ஐபோன் எரிந்தது.! கொஞ்சமில்லை சாமி.!
இந்நிலையில், ஐபோன் எக்ஸ் மேக்ஸ் போன் ஒருவர் கால் பாக்கெட்டில் வைத்து இருந்த போது, திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அவர் நெஞ்சு, வாயிசு, கொஞ்சம் தள்ளி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் உலகம் முழுக்க சக்கை போடு போட்டு வருகின்றது. இந்நிலையில், ஐபோன் நிறுவனம் புதிய ஐ போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது டூயல் சிம்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஐபோன் எக்ஸ் மேக்ஸ் போன் ஒருவர் கால் பாக்கெட்டில் வைத்து இருந்த போது, திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அவர் நெஞ்சு, வாயிசு, கொஞ்சம் தள்ளி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

புதிய ஐ போன் எக்ஸ்:
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் புதிய ஐ போன் எக்ஸ் உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் சிம்முடன் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த போனுக்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.

ஐ போன் எரிந்தது:
ஒருவர் கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் டென் எஸ் மேக்ஸ் ஐ போன் எரிந்தது விட்டதாக அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூன்று வாரத்திற்கு முன் வாங்கப்பட்டது:
இந்நிலையில், கொலம்பஸ் நகரைச் சேர்ந்த ஜோஷ் ஹில்லார்டு என்பவர் மூன்று வாரத்திற்கு முன்னர் ஆப்பிள் டென் எஸ் மேக்ஸ் ஐபோனை வாங்கியுள்ளார். அலுவலக ஓய்வு எடுக்கும் அறையில் இருந்துள்ளார்.

தீப்பற்றி எரிந்தது:
கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஐ போனில் இருந்து தீ வெளியிப்பட்டதாக அவர் கூறினார். உடனடியாக அவர் சுதாரித்துக் கொண்டுள்ளார்.

கழிவறைக்கு ஓடினார்:
அப்போது, பெண் ஒருவர் உடன் இருந்ததாகவும், இருப்பினும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவதற்காக கால் சட்டையை அவிழ்த்தபடி ஓடி, கழிவறைக்குச் சென்று தீ அணைப்பான் மூலம் அணைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஐ போன் தருவதாக ஒப்புதல்:
புதிய ஐபோன் கொடுப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ள போதும், அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஹில்லர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications