சர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஒரு புதிய ஐபோன் மாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதன்படி புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் லொகேஷன் சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் லொகேஷன் விவரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஆராய்ச்சியாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், முதலில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என தெரிவித்துள்ளது.

ஐபோன் 11சீரிஸ் மாடல்களில் யு1 சிப் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சிப் அல்டரா பேண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது பல்வேறு வைடு பேண்ட் சாதனங்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆப்பிள் ஏர் டிராப் கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

ஆப்பிள் சேகரிக்கும் தகவல் சாதனத்தில் மட்டும் நடைபெறுகிறது என்றும், விவரங்கள் எதவும் சர்வெருக்கு அனுப்பப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் வரும் ஐ.ஒ.எஸ் அப்டேட்களில் இந்த அம்சத்தை செயலிழக்க செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இந்த குற்றச்சாட்டை உறுதிபடுத்த முயன்று ஆப்பிள் வாடிக்கையாளர் விவரங்களை சேகரிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் ஆப்பிள் ஏன் இந்த விவகாரத்திற்கு உடனடியான பதில் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications