ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம்: காரணம் என்ன தெரியுமா?
ஐபோன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன்கள் தனித்துவமான இயங்குதளம், தரமான சிப்செட், சிறந்த கேமரா வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகிறது.

ரூ.14 கோடி ரூபாய் அபராதம்
மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஐபோன் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்நிலையில் ஐபோன் 12 பாக்ஸில் அந்த போனுக்கான சார்ஜரை வைக்கத் தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

தவறான விளம்பரம்
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, Procon-SP எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு முகமை தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த அபராதத்தை போட்டுள்ளது. குறிப்பாக தவறான விளம்பரம் மற்றும் சார்ஜரை வைக்கமால் போனை விற்பனை செய்தது தவறு என சொல்லி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டத் திட்டங்களை பின்பற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மேலும் ஐபோன் 12-ல் சார்ஜர் வைக்காததால் அதன் விலையில் மாற்றம் உள்ளதா? என்ற கேள்விக்கும் ஆப்பிள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை என அந்த முகமை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ஐபோன் 12 சாதனங்களில் சார்ஜர் மற்றும் ஹெட்போன் இருக்காது என சொல்லியிருந்தது. பின்பு மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்த நடைமுறையை கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட சிறுது நேரத்திலேயே, சாம்சங் கரீபியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டு, உங்கள் கேலக்ஸி போன்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது. மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் 120 ஹெர்ட்ஸ் திரை வரை அனைத்தையும் தருவதாக ஆப்பிளை நிறுவனத்தை கலாய்க்கும் விதமாக பதிவிட்டிருந்தது.

ஐபோன் 12 மாடலில் 6.1-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஐபோன் 12 மினி மாடலில் 5.4-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அதிக உறுதியான டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது.

5ஜி தொழில்நுட்பம்
இந்த சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் ஆனது உலகின் அதிவேக செல்லுலார் இணைய வேகம் வழங்கும் திறன்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 5ஜி வசதி கிடைக்காத சமயங்களில் எல்டிஇ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. புதிய ஐபோன் 12 மாடல் ஆனது ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. இந்த பிராசஸர் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கன்சோல்களுக்கு இணையான கேமிங் அனுபவத்தை ஐபோனில் வழங்கும் திறனை கொண்டுள்ளது.

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் ஆனது கருப்பு, நீலம், பச்சை, ப்ராடெக்ட் (ரெட்) மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களில் உள்ள பேட்டரி ஆனது நீண்ட நேர பேக்கப் வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications