ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேட் பெறும் சாம்சங் சாதனங்கள்

By Karthikeyan
|
ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேட் பெறும் சாம்சங் சாதனங்கள்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போனுக்கு வரும் அக்டோபரி்ல் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.1 இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அக்டோபர் வரை காத்திராமல் சாம்சங் இன்றே அந்த அப்டேட்டை செய்ய இருப்பதாக வெர்ஜ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக போலந்து நாட்டில் உள்ள கேலக்ஸி எஸ்3 போன்களுக்கு முதலில் இந்த அப்டேட் தொடங்க இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. முதலில் இந்த அப்டேட் சாம்சங்கின் கேஐஇஎஸ் சாப்ட்வேர் வழியாக செய்யப்படும். பின் மிக விரைவில் ஒடிஎ செர்வர் வழியாகவும் செய்யப்படும்.

மேலும் சாம்சங், கேலக்ஸி எஸ்3க்கு மட்டும் இந்த அப்டேட்டை செய்ய போவதில்லை. மாறாக மேலும் 10 போன்களுக்கு இந்த அப்டேட்டை செய்ய இருக்கிறது.

அந்த வகையில் கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ் அட்வான்ஸ், கேலக்ஸி எஸ்2 எல்டிஇ, கேலக்ஸி சாட், கேலக்ஸி ஏஸ் 2, கேலக்ஸி பீம், கேலக்ஸி ஏஸ் ப்ளஸ், கேலக்ஸி மினி 2, கேலக்ஸ் எஸ் டூவோஸ் போன்ற போன்கள் இந்த அப்டேட்டைப் பெற இருக்கின்றன.

அதோடு சாம்சங் தனது 4 டேப்லெட்டுகளுக்கும் அதாவது கேலக்ஸி டேப் 2 7.0, கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸ், கேலக்ஸி நோட் 10.1 மற்றும் மேலும் ஒரு பெயர் குறிப்பிடாத டேப்லெட்டிற்கும் இந்த அப்டேட்டைச் செய்ய இருக்கிறது.

இந்த ஜெல்லி பீன் அப்டேட் சாம்சாங் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று சாம்சங் பலமாக நம்புகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X