கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போனை வழங்கும் ஏசர்!

By Super
|

கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போனை வழங்கும் ஏசர்!
அதிகமான லேப்டாப்களை அறிமுகம செய்த ஏசர் நிறுவனம், புதிய லிக்குவிட் கேலன்ட் சோலோ இ-350 ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களையும் இங்கே தெரிந்து

கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை டிஎப்டி தொழில் நுட்ப வசதியினையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளம் கொண்டு இயங்கும்.

இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் பிராசஸர் வசதியினையும் எளிதாக பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தினை மட்டும் இல்லாமல், டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியினையும் பயன்படுத்தலாம்.

5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் சிறப்பாக பெறலாம். புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகள் சாதாரணமாகிவிட்டது.

இப்பொழுதுல்ல ஸ்மார்ட்போன்கள் வைபை வசதியினை வழங்கும் என்பது தான் முக்கியமான விஷயமாக என்று பல வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது. இந்த ஏசர் லிக்குவிட் கேலன்ட் சோலோ இ-350 ஸ்மார்ட்போனில் வைபை நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை எளிதாக பெறலாம்.

1,500 எம்ஏஎச் பேட்டரி உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சிறப்பான முறையில் நீடித்து உழைக்கும். இந்த ஸ்மார்ட்போன் எடை 145 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதனால் இதை கையாள்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.

ஸ்மார்ட்ஃபெனோம் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X