ஓரே நாளில் 6 லட்சம் செல்போனை விற்ற சியோமி.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் முன்னியில் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை இந்தியர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் சியோமி நிறுவத்தின் போன்கள்
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் முன்னியில் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை இந்தியர்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.

ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் சியோமி நிறுவத்தின் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் மற்ற நிறுவனத்தின் போன்களை காட்டிலும் வடிவமைப்பிலும் சிறந்து விளங்குகின்றது.
இதனால் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால், அனைத்து தரப்பினர்களும் இந்த போன்களை விரும்பி வாங்குகின்றனர்.

நோட் 6 புரோ:
சீன நிறுவனமான சியோமியின் மொபைல் போன் பிராண்டான ரெட்மி, 22ம் தேதிதனது புதியநோட் 6 புரோபோனை அறிமுகம்செய்தது. குவாட் கேமிராஆல் ரவுண்டர் என்றுஅழைக்கப்பட்டஇந்த நோட் 6 புரோ4ஜிபி, 6ஜிபி ரேம் மெமரியுடன் முறையே ரூ.13,999, ரூ.15,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆப்பர் அறிவிப்பு:
அறிமுக சலுகையாகவெள்ளிக்கிழமை அன்றுபிளிப்கார்ட் மற்றும் எம் டாட்காம் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் 'பிளாக் ஃப்ரைடே விற்பனை' மூலம் ரூ.1000 ஆஃபர் அளிப்பதாகவும் அறிவித்தது.

ரூ. 6 லட்சம் போன்கள் விற்பனை:
இந்த ஆஃபரில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 லட்சம் ரெட்மி நோட் 6 புரோ போன்கள் விற்று சாதனை படைத்துள்ளன. இதுகுறித்து சியோமி நிறுவனத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாக்குள் தீரும் நிலை:
அதில் ‘ரெட்மி நோட் 6 புரோ முதல் நாளிலேயே 6 லட்சம் போன்கள் விற்பனைஆகியுள்ளது. விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஸ்டாக்குகள் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications