புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது சாம்சங்

By Super
|

புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது சாம்சங்
பல அரிய தொழில் நுட்பம் கொண்ட மொபைலின் பட்டியலில் புதிய சாம்சங் கேலக்ஸி டபிள்யூ மொபைலும் இணைந்து கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைல் ரஷ்யாவில் ஆன்-லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைல் டிஎப்டி மற்றும் மல்டி டச் தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்கிறது.

கேலக்ஸி டபிள்யூ மொபைலில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் கியூவள்காம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4ஜிபி வரை இன்டர்னல் மெமரியை கொண்டிருக்கும் இந்த மொபைல், மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி

கார்டு மூலம் 32ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

205 அட்ரினோ கிராஃபிக் பிராசஸரை கொண்டுள்ளதால் மல்டி டாஸ்க்கிங்கில் பின்னி எடுக்கும்.

இந்த மொபைலின் அனைவரையும் மகிழ்விக்க 5 மெகா பிக்ஸல் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் என்று இரண்டு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த மொபைலின் மூலம் கிடைக்கும் புகைப்படமும், வீடியோவும் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

இந்த கேமராவினால் 720பி துல்லியத்தில் வீடியோ வசதியினையும், ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களையும் வழங்க முடியும்.

ஆன்ட்ராய்டு 2.3.3 ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது. டச்விஸ் மியூசிக் ப்ளேயர் தொழில் நுட்பத்தினையும் இதன் மூலம் பெற முடியும்.

இந்த சாம்சங் கேலக்ஸி டபிள்யூ மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் இந்த மொபைலின் விலை தெரியவரவில்லை என்றாலும், இதன் தொழில் நுட்பங்களின் பயன்பாடுகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்துவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X