ஹிந்தியில் டைப் செய்யும் வசதியுடன் புதிய மொபைல்போன்

By Super
|
ஹிந்தியில் டைப் செய்யும் வசதியுடன் புதிய மொபைல்போன்
ஜேபி-325 என்ற பட்ஜெட் மொபைலை வெளியிட உள்ளது ஜோஷ் நிறுவனம். இன்னும் சில மாதங்களில் இந்த மொபைல் வெளிவர உள்ளது. வாடிக்கையாளர்கள் என்னென்ன அடிப்படை வசதிகளை எதிர் பார்க்கின்றார்களோ, அந்த வசதிகளை வழங்குகிறது ஜோஷ் நிறுவனம். இது டச் மற்றும் டைப் வசதி கொண்ட மொபைல் போன்.

இது டியூவல் வசதி கொண்ட மொபைல். 2.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் மற்றும் மல்டி-டேப் கீப்பேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரிமூவபுல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களைப் பொருத்த வரையில் பேட்டரி வசதி ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அந்த வகையில் ஜேபி-325 மொபைலில் 1,300 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஸ்டான்-பை டைம் வழங்க முடியும்.

இதில் டியூவல் லேன்ங்குவேஜ் வசதியும் உள்ளது. இதனால் ஆங்கிலத்திலும் மற்றும் ஹிந்தியிலும் எளிதாக டைப் செய்ய முடியும். ஜேபி-325 மொபைலில் சிறப்பான கேமரா உள்ளதால் தெளிவான புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கும் உதவுகிறது.

4ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதன் மூலம் தேவையான தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். லெட் டார்ச் வசதியையும் அளிக்கிறது. ஜேபி-325 மொபைலுக்கு ரூ.4,899 விலை நிர்ணயம் செய்திருக்கிறது ஜோஷ் நிறுவனம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X